திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே அம்பாசமுத்திரம் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கோடை வெப்பத்தால் மரங்கள் கருகியுள்ளதால் காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்து வருகிறது. புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.